கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் மேலும் ஐவரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது சடலங்கள் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் உள்ள ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நேற்று (ஒக்-20) மேலும் 05 சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்ட்டுள்ளன.
முஸ்லிம்கள் - 03
இந்துக்கள் - 02
இவ்வாறு 05 பேரின் சடலங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து அங்கு இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ள கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 3145 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு